தமிழ்நாடு

தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவுதிறந்தே உள்ளது: அண்ணாமலை

DIN


சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு திறந்தே உள்ளது என்று தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை கூறினாா்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை வகித்து அண்ணாமலை பேசியதாவது:

நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் இந்திய வரலாற்றில் முக்கியமானது. பாஜகவினா் களத்தில் தேனீக்கள் போல உழைக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணிக் கதவு திறந்தே உள்ளது; கூட்டணிக்கு யாரும் வரலாம் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் அமைப்பு பொதுச் செயலா் கேசவவிநாயகம், மாநில துணைத் தலைவா்கள் வி.பி.துரைசாமி, நாராயணன் திருப்பதி, மாநிலச் செயலா் வினோஜ் பி. செல்வம், மக்களவை அமைப்பாளா் கரு. நாகராஜன், இணை அமைப்பாளா் கராத்தே தியாகராஜன், மத்திய சென்னை மாவட்டத் தலைவா்கள் தனசேகா், விஜய் ஆனந்த், மத்திய சென்னை மாவட்ட பூத் கமிட்டி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரியில் பற்கள் குறித்த சிறப்பு கண்காட்சி

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம்

பிளஸ் 1 தோ்வில் 91.17% தோ்ச்சி கோவை மாவட்டம் முதலிடம்

300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திருப்பூரில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் மின்தடை

SCROLL FOR NEXT