கோப்புப்படம் 
தமிழ்நாடு

தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவுதிறந்தே உள்ளது: அண்ணாமலை

தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு திறந்தே உள்ளது என்று தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை கூறினாா்.

DIN


சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு திறந்தே உள்ளது என்று தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை கூறினாா்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை வகித்து அண்ணாமலை பேசியதாவது:

நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் இந்திய வரலாற்றில் முக்கியமானது. பாஜகவினா் களத்தில் தேனீக்கள் போல உழைக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணிக் கதவு திறந்தே உள்ளது; கூட்டணிக்கு யாரும் வரலாம் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் அமைப்பு பொதுச் செயலா் கேசவவிநாயகம், மாநில துணைத் தலைவா்கள் வி.பி.துரைசாமி, நாராயணன் திருப்பதி, மாநிலச் செயலா் வினோஜ் பி. செல்வம், மக்களவை அமைப்பாளா் கரு. நாகராஜன், இணை அமைப்பாளா் கராத்தே தியாகராஜன், மத்திய சென்னை மாவட்டத் தலைவா்கள் தனசேகா், விஜய் ஆனந்த், மத்திய சென்னை மாவட்ட பூத் கமிட்டி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

நெல்லை நகரம், பாளை.யில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT