சபரிமலையில் மகரவிளக்கு தினமான திங்கள்கிழமை தமிழக பின்னணி பாடகா் வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்படுகிறது.
சபரிமலை சந்நிதானம் அரங்கத்தில் திங்கள்கிழமை காலை 8 மணி அளவில் நடைபெறும் விழாவில், பாடகா் பி.கே.வீரமணிதாசனுக்கு ரூ. 1 லட்சம் மற்றும் பாராட்டுப் பத்திரம் அடங்கிய விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதை தேவஸம் அமைச்சா் கே.ராதாகிருஷ்ணன் வழங்குகிறாா்.
வீரமணிதாசன் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை பாடியுள்ளாா். இதில், பெரும்பாலானவை ஐயப்ப பக்தி பாடல்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.