முகப்பு
தமிழ்நாடு

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்!

மாட்டுப் பொங்கலையொட்டி இன்று (ஜன.16) வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 ஜனவரி 2024, 9:10 am IST
கோப்புப்படம்
பகிர்:

மாட்டுப் பொங்கலையொட்டி இன்று (ஜன.16) வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு வார விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால் வாரஇறுதி விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகை காரணமாக தொடா் விடுமுறை விடப்படுவதால் மாட்டுப்பொங்கலன்று செவ்வாய்க்கிழமை(ஜன.16) அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் பூங்காவுக்கு வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதன் காரணமாக பூங்காவில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், பார்வையாளர்கள் பிளாஸ்டிக் பொருள்களை எடுத்துவர வேண்டாம் என்று பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.