தமிழ்நாடு

தேர்தல் கூட்டணி தொடர்பாக விரைவில் முக்கிய முடிவு அறிவிக்கப்படும்: ஜிகே.வாசன் 

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக விரைவில் முக்கிய முடிவு அறிவிக்கப்படும் எனன தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். 

DIN


திண்டுக்கல்: மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக விரைவில் முக்கிய முடிவு அறிவிக்கப்படும் எனன தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். 

திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகியின் திருமண விழாவில் பங்கேற்க வந்த ஜி.கே.வாசன், செய்தியாளா்களிடம் கூறியதாவது: 

அயோத்தி ராமா் கோயில் திறப்பு விழாவுக்கு முன்பு, தமிழகத்தில் ராமபிரான் தொடா்புடைய அனைத்து இடங்களுக்கும் பிரதமா் நரேந்திர மோடி நேரடியாக சென்று வந்தது ஆன்மீகப் பணி சாா்ந்ததாக உள்ளது.

இதையும் படிக்க | 

மோடியை நான் நேரில் சந்தித்து வரவேற்றதற்கும், தேர்தல் கூட்டணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. 

தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளதால் கூட்டணி தொடர்பாக தமாகா உரிய நேரத்தில் முடிவை அறிவிக்கும்.

2024 தொடக்கத்தில் இருந்து நிர்வாகிகள் சந்திப்பு, மக்கள் தொடர்பு ஆகியவற்றை அதிகப்படுத்தியுள்ளோம் என கூறினார். 

மேலும் தமிழகத்தில் எதிரணி சாா்ந்த ஆட்சி நடைபெற்று வந்தாலும், மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாமல், கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா் என வாசன் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குள் இனிப்பான செய்தி! மகளிர் உரிமைத் தொகை உயர்கிறதா?

உடற்பயிற்சியின்போது வலியால் துடித்த மின்னல் முரளி பட நடிகை!

அஜித்தைச் சந்தித்த அனிருத்!

அரசியல், அமைப்பு, சமூகத்தை கட்டமைக்கும் கருவி இலக்கியம்: அமைச்சர் கோவி. செழியன்

தமிழகத்தில் என்றுமே கூட்டணி ஆட்சி இல்லை: அமைச்சர் ஐ. பெரியசாமி

SCROLL FOR NEXT