தமிழகத்தில், பயணிகளிடையே போதுமான வரவேற்பு இல்லாத காரணத்தால், ஒரு ரயில் நிலையமே மூடப்படவிருக்கிறது.
தமிழகத்தின், கரூர் - சேலம் வழித்தடத்தில் உள்ள வாங்கல் ரயில் நிலையம்தான் மூடப்படவிருக்கும் அந்த ரயில் நிலையம். இது நாளை முதல் அதாவது ஜனவரி 25ஆம் தேதி மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதாவது, மோனூர் - கரூர் வழித்தடத்தில் உள்ள வாங்கல் ரயில் நிலையம் நாளை முதல் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் வாங்கல் ரயில் நிலையம் மூடப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, வாங்கல் ரயில் நிலையத்தில் இனி எந்த ரயில்களும் நிற்காது என்றும் இன்று மட்டுமே இந்த ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும் என்றும் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
அது மட்டுமல்லாமல், பயணிகளுக்கு அந்த ரயில் நிலையத்தில் பயணச்சீட்டும் வழங்கப்படாது, வேறு எங்கிருந்தும் இந்த ரயில்நிலையத்துக்கான பயணச்சீட்டும் வழங்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.