கோப்புப்படம் 
தமிழ்நாடு

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: ஜன. 28-ல் பேச்சுவார்த்தை

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே ஜனவரி 28 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே ஜனவரி 28 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 28 ஆம் தேதி மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழு காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது குறித்து முடிவெடுக்கப்படும்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கொமதேக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறுள்ளன. மநீம உள்ளிட்ட இன்னும் சில கட்சிகளும் இடம்பெறும் எனவும் எதிர்பாா்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக திமுக, காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகள் அறிவிப்பு!

கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் சுட்டுக் கொலை!

கோவை அருகே ஆம்புலன்ஸ் - கார் மோதி விபத்து!

ஏஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம்; ரூ. 10,000 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு! - டிஆர்பி ராஜா

இந்தியாவின் MPATGM ரக ஏவுகணை சோதனை வெற்றி! நகரும் இலக்கை துல்லியமாக தாக்கக்கூடியது!

SCROLL FOR NEXT