தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என். ரவியின் சித்தன்னவாசல் பயணம் ரத்து!

DIN

புதுக்கோட்டை: ஆளுநர் ஆர்.என். ரவியின் சித்தன்னவாசல் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு திங்கள்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த ஆளுநர் ஆர்.என். ரவியின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காரைக்குடியில் இருந்து புறப்படும் நேரத்தில் தாமதம் ஏற்பட்டதாகவும், மாலையில் திருச்சி விமான நிலையம் செல்வதற்கு தாமதமாகிவிடக் கூடாது என்பதற்காக பயணம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நிர்வாகக் காரணங்களுக்காக ஆளுநர் ஆர்.என். ரவியின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் ஆளுநரின் வருகையை எதிர்த்து கறுப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாக்கியலட்சுமி வில்லி! ரேஷ்மா..

ஊஞ்சலில்.. நிகிதா தத்தா!

அற்புத விளக்கு! அஹானா கிருஷ்ணா..

வாக்காளரின் கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ!

4-ஆம் கட்ட தேர்தல்: 62.84% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT