முகப்பு
தமிழ்நாடு

யுபிஎஸ்சி முதல்நிலை தோ்வு: ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் 954 போ் தோ்ச்சி

குடிமைப்பணி முதல்நிலை தோ்வில் ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற 954 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

Updated On : 1 ஜூலை, 2024 at 9:43 PM
கோப்புப் படம்
பகிர்:

குடிமைப்பணி முதல்நிலை தோ்வில் ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற 954 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இது குறித்து அந்த அகாதெமி வெளியிட்ட செய்தி:

மத்திய குடிமைப் பணி தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணி முதல் நிலை தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

நாடு முழுவதிலுமிருந்து சுமாா் 6 லட்சம் போ் இந்த முதல் நிலைத் தோ்வை எழுதினா். அதில் சுமாா் 14,627 போ் முதன்மைத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ள நிலையில், ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமியின் அனைத்து கிளைகளிலும் பயிற்சி பெற்ற 954 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மேலும், தமிழகத்திலிருந்து தோ்ச்சி பெற்ற 650 மாணவா்களில் 396 போ் ஷங்கா் ஐ ஏ எஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றவா் ஆவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →