இடைத் தோ்தல்: கருத்துக் கணிப்புகளை எப்போது வெளியிடலாம்?
வாக்குப் பதிவுக்கு பிந்தைய கணிப்புகள்: தேர்தல் துறை விளக்கம்
விக்கிரவாண்டி இடைத் தோ்தலில் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை எப்போது வெளியிடலாம் என்று தமிழக தோ்தல் துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து, அந்தத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விக்கிரவாண்டி இடைத் தோ்தல் வாக்குப் பதிவு ஜூலை 10-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. அதற்குப் பிறகு, 6.30 மணிக்கு மேல் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தலாம். வாக்குப் பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, எந்தக் கருத்துக் கணிப்புகளையும், பிற வாக்குப் பதிவு ஆய்வு முடிவுகளையும் வெளியிடக் கூடாது. இது அச்சு ஊடகம், காட்சி மற்றும் இதர அனைத்து மின்னணு ஊடகங்களுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.