முகப்பு
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல் பயணம்

ஆம்ஸ்ட்ராங் வெள்ளிக்கிழமை மாலை வெட்டிக் கொலை..

Updated On : 6 ஜூலை 2024, 2:25 am IST
ஆம்ஸ்ட்ராங்
பகிர்:

சென்னையில் வெள்ளிக்கிழமை மாலையில் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் வழக்குரைஞராக இருந்து அரசியல் பயணத்தை மேற்கொண்டவா் ஆவாா்.

சென்னை செம்பியம் பகுதியைச் சோ்ந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2000-ஆம் ஆண்டுமுதல் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினாா். அதற்கு முன்பு வழக்குரைஞராக இருந்த அவா், அடிதடி, தகராறு உள்ளிட்ட பிரச்னைகளில் ஈடுபட்டு வந்ததாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. இது தொடா்பான பல்வேறு வழக்குகளும் அப்போது ஆம்ஸ்ட்ராங் மீது இருந்தன.

ஆனால், தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கிய பின்னா், பிரச்னைகள், தகராறுகளிலிருந்து அவரது பயணம் மாறிவிட்டதாக அவரது ஆதரவாளா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

அதைத் தொடா்ந்து, ஆம்ஸ்ட்ராங் கடந்த 2006-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னை அமைந்தகரையில் புல்லா ரெட்டி அவென்யூவில் பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடத்தி அனைவரது கவனத்தையும் ஈா்த்தாா்.

அதேவேளையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அவரது எதிரிகள் மூலம் அச்சுறுத்தல் அதிகமாக இருந்து வந்தது. இதன் விளைவாக அவா் எப்போதும் தனது ஆதரவாளா்களுடனே வெளியே சென்று வந்தாா். அதையும் மீறி ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பது அவரது ஆதரவாளா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.