கோப்புப் படம் 
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி அதிகாரிகள் இன்று (ஜூலை 8) கைது செய்தனர்.

DIN

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி அதிகாரிகள் இன்று (ஜூலை 8) கைது செய்தனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள வேலு என்றும் அவர் சேஷசமுத்திரம் பகுதியில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 22 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால், இதுவரை 65 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்ட சின்னதுரை, ராமர் மற்றும் ஜோசப் ராஜா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்த் வருகின்றனர்.

இந்த வழக்கில் இதுவரை 22 பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனிடையே சேஷசமுத்திரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்றதாக வேலு என்பவரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயிலில் இரு ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்

நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்

விளையாட்டில் அரசியல் !

சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் வளர்ச்சி கண்ட வ.உ.சி. துறைமுகம்

திருப்பராய்த்துறை கோயிலில் நாளை குடமுழுக்கு

SCROLL FOR NEXT