முகப்பு
கோப்புப் படம்
தமிழ்நாடு

இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாடு

இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Updated On : 8 ஜூலை, 2024 at 2:58 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீலகிரி மாவட்டத்தின் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கரூர், வேலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று (ஜூலை 8) முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்பு அறிவித்திருந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →