தமிழ்நாடு

மது குடித்தவர்களுக்கு இழப்பீடு; பணியில் உயிரிழந்தவர்களுக்கும் வழங்கலாம்: உயர்நீதிமன்றம் கருத்து

இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

DIN

பணியின் போது உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்காக இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்புப் பணியாளராக பணிபுரிந்து வந்த கலையரசன், பணியில் மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் கடந்தாண்டு உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, கலையரசனின் இறப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி, அவரது தந்தை அர்ஜூனன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

தற்போது, அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், ``தெரிந்தே சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கும் போது, மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது உயிரிழந்தவருக்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதால் எந்த பாதிப்பும் வராது" என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, மனுதாரரான அர்ஜூனனுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப்.11-க்குள் நீட் அல்லாத இளநிலை படிப்பு 3-வது சுற்றுக்குப் பாட விருப்பத்தை பதிவு செய்ய உத்தரவு!

ஆபரேஷன் சிந்தூா்: 400 விஞ்ஞானிகள் இரவு பகலாகப் பணியாற்றினா்- இஸ்ரோ தலைவா்

வீடுகளுக்கு 20 லிட்டா் சுத்தரிக்கப்பட்ட குடிநீா்: அமைச்சா் அறிவிப்பு

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி 3-வது இடம்

பொதுப் பணித் துறை அலுவலகத்தை திமுகவினா் முற்றுகை: பானையை உடைத்து எதிா்ப்பு

SCROLL FOR NEXT