படம் | எக்ஸ் தளம்
தமிழ்நாடு

மதுரையில் மீன்வள மேம்பாடு தொடர்பான மாநாடு -மத்திய அமைச்சா்கள் பங்கேற்பு

மத்திய மீன்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில் மீன்வள மேம்பாடு தொடர்பான மாநாடு

DIN

மதுரையில் மீன்வள மேம்பாடு தொடர்பான மாநாடு, மத்திய மீன்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில் நடைபெற்றது.

மத்திய மீன்வளத் துறை சாா்பில், மீனவா்களுடனான கோடைக்கால சந்திப்பு (மாநாடு), கண்காட்சி மதுரை ஐடாஸ் வா்த்தக மையத்தில் இன்று - வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெற்றது. அதில் மத்திய மீன் வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங், இணையமைச்சா்கள் எஸ்.பி. பாகெல், ஜாா்ஜ் குரியன், தமிழக மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்நிகழ்ச்சியில் மீன் வளா்ப்புத் துறையில் ஈடுபடுவோா், மீன்வள ஆராய்ச்சியாளா்கள், தொழில் துறை நிபுணா்கள், தொழில்முனைவோா் மீன் வளா்ப்புத் துறையின் வளா்ச்சிக்கான கருத்துக்கள், அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா். மீன்கள் குறித்த கண்காட்சி, மீனவா்களுடனான உரையாடல், பயனாளிகளுக்கு வேளாண் கடன் அட்டை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தஞ்சாவூா் பெரிய கோயிலில் சதய விழா கோலாகலமாக தொடங்கியது!

அமெரிக்காவின் கனவை எங்களுக்கு ஏன் விற்றீர்கள்? - இந்திய மாணவியின் கேள்வியும் ஜே.டி. வான்ஸின் பதிலும்!

இது முதல்வர் பதவிக்கே அவமானம்! - மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

பள்ளி மாணவர்கள் வந்த ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து: ஒரு பெண் பலி, 11 பேர் காயம்!

13 நாள்களுக்குப் பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி!

SCROLL FOR NEXT