ஆம்ஸ்ட்ராங்(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கொலையாளிகள் 10 நாள்களாக நோட்டமிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங், தினந்தோறும் எங்கெங்கு செல்கிறார், எத்தனை மணிக்குச் செல்கிறார் என்பது உள்பட அனைத்தையும், அவரைக் கொலை செய்வதற்கு முன் 10 நாள்கள் நோட்டமிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, மறைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

11 பேரையும் பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணை மூலம், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன் 10 நாள்கள் நோட்டமிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் கொலை செய்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே நிகழ்விடத்திற்கு வந்து கொலையாளிகள் காத்திருந்துள்ளனர் எனவும் போலி நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தி 5 இருசக்கர வாகனத்தில் வந்து கொலை செய்ததும் அம்பலம் ஆகி உள்ளது.

அதே நேரம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரின் வங்கிப் பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, ராமு என்கிற வினோத்தின் வங்கிக் கணக்குகளும் காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அருள் என்பவரின் செல்போனில் உள்ள எண்களைக் கொண்டு விசாரணை நடத்தி, திருநின்றவூரைச் சேர்ந்த மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி மசூதி ஆக்கிரமிப்பு இடிப்பு: வன்முறையில் 5 காவலர்கள் காயம்!

தேவாரம்: சாக்கலூத்து மெட்டு மலைச்சாலை அமைக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்!

டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

விஜய்யை சந்தித்தது உண்மை : உ.பி. உடன் தமிழகத்தை ஒப்பிடவில்லை - பிரவீன் சக்கரவர்த்தி

50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்... அமெரிக்காவுக்கு வழங்கியது வெனிசுவேலா!

SCROLL FOR NEXT