நீலகிரி, வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை!
பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை(ஜூலை 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Updated On : 16 ஜூலை, 2024 at 8:06 AM
தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் கோவை மாவட்டத்தில் வால்பாறை வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை(ஜூலை 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, பந்தலூர், கூடலூர் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. வால்பாறையிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இந்த நிலையில், கனமழையால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
Advertisement
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோலையாறு பகுதியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.