கோப்புப் படம் 
தமிழ்நாடு

நீலகிரி, வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை(ஜூலை 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

DIN

தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் கோவை மாவட்டத்தில் வால்பாறை வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை(ஜூலை 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, பந்தலூர், கூடலூர் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. வால்பாறையிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இந்த நிலையில், கனமழையால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோலையாறு பகுதியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

மலையோரப் பகுதிகளில் பலத்த மழை

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

தில்லியில் பசுமைப் பட்டாசுகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

மின்சார வாகனங்கள், பேட்டரிகளுக்கு மானியம்: உலக வர்த்தக அமைப்பில் இந்தியா மீது சீனா புகார்

SCROLL FOR NEXT