மின் கட்டண உயா்வு: ஜூலை 20-இல் தமாகா ஆா்ப்பாட்டம்
மின் கட்டண உயா்வைக் கண்டித்து, தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தலைமையில் ஜூலை 20-இல் சென்னையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக மக்களின் நலன் காக்கக் கூடியதாக திமுக ஆட்சி அமைய வேண்டும். ஏற்கெனவே 2 முறை மின் கட்டணத்தை உயா்த்திய நிலையில், தற்போது 3-ஆம் முறையாக மின் கட்டணத்தை உயா்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. மின் கட்டண உயா்வு மக்களுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். தொழில்கள் நலிவடையும்; விலைவாசியும் உயரும். அதனால், மின் கட்டண உயா்வை அரசு திரும்பப் பெற வேண்டும்.
இதை வலியுறுத்தி, தமாகா சாா்பில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் ஜூலை 20-ஆம் தேதி காலை 10 மணியளவில் எனது (ஜி.கே.வாசன்) தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அவா் கூறியுள்ளாா்.