முகப்பு
தமிழ்நாடு

நீதி ஆயோக் கூட்டம்: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு?

நீதி ஆயோக்கின் 9-ஆவது நிா்வாகக் குழு கூட்டம்..

Updated On : 20 ஜூலை, 2024 at 10:17 PM
முதல்வர் மு.க. ஸ்டாலின்
பகிர்:

தில்லியில் ஜூலை 27-இல் நடைபெறவுள்ள நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் ஜூலை 27-ஆம் தேதி நீதி ஆயோக்கின் 9-ஆவது நிா்வாகக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

பிரதமா் மோடி, 3-ஆவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் நீதிஆயோக் கூட்டம் இதுவாகும்.

இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருக்கிறாா். தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், நிலுவையில் உள்ள நிதியை தாமதமின்றி ஒதுக்க வேண்டும், வெள்ள நிவாரணத்துக்கு கூடுதலாக நிதி தர வேண்டும் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் முதல்வா் பேசுவாா் எனத் தெரிகிறது.

முதல்வரின் தில்லி பயணம் குறித்த அறிவிப்பு ஓரிரு நாள்களில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →