முகப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

2026 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது அதிமுக!

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை அதிமுக தொடங்கி விட்டதாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் அதிமுக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு

2026 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது அதிமுக!

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை அதிமுக தொடங்கி விட்டதாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் அதிமுக அறிவித்துள்ளது.

Updated On : 21 ஜூலை, 2024 at 2:50 PM
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
பகிர்:

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை அதிமுக தொடங்கி விட்டதாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் அதிமுக அறிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செய்தியாளர் சந்திப்பை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது.

அதில், எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை அதிமுக தொடங்கிவிட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும்.

எவ்வாறு மக்களை சந்திப்பது. எவ்வாறு மக்கள் பிரச்னைகளை அறிந்துகொள்வது என்பது தொடர்பாக தலைமை சில விளக்கங்களை கொடுத்துள்ளது.

அதிமுக திட்டங்கள் குறித்து முழுமையாக மக்களிடம் கொண்டு சென்று விளக்க வேண்டும்.

3 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் ஏற்பட்ட அவலங்கள், செயல்படுத்தப்படாத திட்டங்கள், குடிநீர் வரி, வீட்டு வரி, மின் கட்டண உயர்வு, தற்போது குப்பைக்கும் வரி - உள்ளிட்டவை குறித்து மக்களிடம் எடுத்துரைப்போம்.

கள்ளச்சாராய மரணம் குறித்து பேசுவோம். விழுப்புரத்தில் களச்சாராயம் அருந்தியதாக சமீபத்தில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனில், கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

திமுக செயல்பாடுகள் அறிக்கையோடு நிற்கிறது. நடைமுறையில் எதையும் செய்துகாட்டவில்லை என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →