ஆவடி, திருத்தணி ரயில் சேவையில் இன்று மாற்றம்
சென்னை கடற்கரையிலிருந்து ஆவடி, திருத்தணி ,கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) காலை 10.10 மணி முதல் பிற்பகல் 3.10 மணி வரை ரயில்வே பாராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் சென்னை கடற்கரையிலிருந்து ஆவடி, திருத்தணி ,கும்மிடிப்பூண்டிசெல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கடற்கரையிலிருந்து ஆவடிக்கு காலை 10.25 மணி, 10.35, 11.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் மற்றும் மறுமார்க்கமாக ஆவடியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
Advertisement
Advertisement
கும்மிடிபூண்டியிலிருந்து கடற்கரைக்கு காலை 8.50 மற்றும் 10.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் கடற்கரை வருவதற்கு பதிலாக கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி ஜீவா வழியாக ஆவடிக்கு இயக்கப்படும்.
இதுபோல் ஆவடியில் இருந்து பகல் 12.10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் கடற்கரை வராமல் வியாசர்பாடி ஜீவா, கொருக்குப்பேட்டை வழியாக சூலூர்பேட்டை சென்றடையும்.
சென்ட்ரல் வரும் ரயில்கள்: திருத்தணியில் இருந்து காலை 8.50 மணிக்கும், திருவள்ளூரில் இருந்து காலை 11 மணிக்கும், கடம்பத்தூரில் இருந்து பகல் 12.05 மணிக்கும் புறப்படும் ரயில்கள் கடற்கரை வராமல் சென்னை சென்ட்ரல் (மூர்மார்க்கெட் வளாகம்) வந்தடையும்.
சென்னை கடற்கரையில் இருந்து திருத்தணிக்கு பகல் 12.10 மணிக்கும், திருவள்ளூருக்கு பகல் 1.05 மணிக்கும், பட்டாபிராமுக்கு பிற்பகல் 1.50 மணிக்கும், அரக்கோணத்துக்கு பிற்பகல் 2.25 மணிக்கும் செல்லும் ரயில்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.