முகப்பு
முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
தமிழ்நாடு

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து.. மத்திய அரசின் திறமையின்மை: முதல்வர்

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டுள்ளது மத்திய அரசின் திறமையின்மையை காட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து.. மத்திய அரசின் திறமையின்மை: முதல்வர்

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டுள்ளது மத்திய அரசின் திறமையின்மையை காட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 13 ஜூன், 2024 at 2:25 PM
முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
பகிர்:

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டுள்ளது மத்திய அரசின் திறமையின்மையை காட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதன் மூலம் சமீபத்திய நீட் முறைகேட்டிலிருந்து இருந்து தப்பிக்க மத்திய அரசு முயற்சி செய்வது அவர்களின் திறமையின்மையின் மற்றொரு ஒப்புதலாகும்.

மாநிலங்களின் உரிமையைப் பறித்த பிறகு, முறைகேடுகளின் மையமாக விளங்கும் பிரச்னைகள் மற்றும் ஒழுங்கற்ற முறையில் தேர்வுகளை நடத்துதல் போன்ற முக்கியப் பிரச்னைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாது.

மத்திய அரசின் திறமையின்மையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் வேதனையைப் பற்றிய அவர்களின் அக்கறையின்மையையும் கண்டிக்கும் அதே வேளையில், மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →