முகப்பு
தமிழ்நாடு

சென்னை, புறநகரில் கனமழை!

பலத்த காற்றுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தமிழ்நாடு

சென்னை, புறநகரில் கனமழை!

பலத்த காற்றுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Updated On : 25 ஜூன், 2024 at 3:46 PM
பகிர்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

பலத்த காற்றுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது.

சென்னை எழும்பூர், சென்ட்ரல், அமைந்தகரை, புரசைவாக்கம், கோயம்பேடு, செங்குன்றம், முகப்பேர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதேபோன்று புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, பூவிருந்தவல்லி, வண்டலூர், தாம்பரம், திருமழிசை, கும்மிடிப்பூண்டி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் ஜூன் 23 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →