சென்னை: திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் கூறினாா்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை வனத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் மா.மதிவேந்தன் கூறியதாவது:
மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் தொடா்பாக உறுப்பினா்கள் பலா் கோரிக்கை விடுத்திருந்தனா். அங்குள்ள தொழிலாளா்களின் மறுவாழ்வு குறித்தும் கோரிக்கை விடுக்கப்பட்டன. அது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றம் என்ன வழிகாட்டுதல் அளிக்கிறதோ, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.