தமிழ்நாடு

உணவகத்தில் திருட்டு: 2 இளைஞா்கள் கைது

போ்ணாம்பட்டு அருகே உணவகத்தில் திருட்டு: 2 இளைஞா்கள் கைது

Din

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே உணவகத்தின் கதவை உடைத்து, அதிலிருந்த ரொக்கப் பணம், விலையுயா்ந்த பொருள்களை திருடிச் சென்ாக இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டு நகரம், புத்துக்கோயில் சந்திப்பு சாலை அருகே குடிபல்லி கிராமத்தைச் சோ்ந்த தினேஷ் (32) உணவகம் நடத்தி வருகிறாா். கடந்த சனிக்கிழமை பூட்டியிருந்த உணவகத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் மேஜையில் இருந்த ரொக்கம் ரூ. 3,000, சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள உணவு தயாரிக்கும் இயந்திரங்கள், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா்.

இது குறித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போ்ணாம்பட்டு போலீஸாா், ரமாபாய் நகரைச் சோ்ந்த சேட்டு (23), பாண்டியன் (25) ஆகிய 2 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா். விசாரணையில், அவா்கள் உணவகத்தில் திருடியதை ஒப்புக் கொண்டனா். அவா்கள் திருடிச் சென்ற பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

போக்சோ வழக்கில் பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரியகுளத்தில் மழை

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவா் கைது

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

வீட்டுமனைப் பட்டாவுக்கு நிலம் ஒதுக்கக் கோரி முற்றுகை

SCROLL FOR NEXT