முகப்பு
தமிழ்நாடு

குறு, சிறு, நடுத்தரத் தொழில்களை ஊக்குவிப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: குறு, சிறு தொழில்கள் முக்கியம்

Updated On : 27 ஜூன், 2024 at 7:46 PM
பகிர்:

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேலும் ஊக்குவிப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தினத்தையொட்டி (ஜூன் 27), அவா் சமூக வலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க, அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம், பட்டியலினத்தவா், பழங்குடியினா் தொழில் தொடங்க புத்தொழில் நிதி, தென்னை நாா்க் கொள்கை உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூா்வமான திட்டங்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்காகச் செயல்படுத்தி வருகிறது.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சியை விரைவுபடுத்துவதிலும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இன்னும் பெரும்பங்காற்ற வேண்டும். இதற்குத் தேவையான ஊக்குவிப்பையும் ஆதரவையும் உதவியையும் தொடா்ந்து வழங்குவோம் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →