முகப்பு
தமிழ்நாடு

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் ஜூலை 31 வரை பகுதியளவில் ரத்து

விழுப்புரத்திலிருந்து தினமும் காலை 5.35 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் ஜூலை 31 வரை பகுதியளவில் ரத்து

Updated On : 29 ஜூன், 2024 at 12:58 PM
பகிர்:

விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில், ஜூலை 31-ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தெற்கு மத்திய ரயில்வே எல்லைக்குள்பட்ட திருப்பதி ரயில் நிலையத்தில், பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக விழுப்புரம் - திருப்பதி இடையேயான ரயில் சேவை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

விழுப்புரத்திலிருந்து தினமும் காலை 5.35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண் 16854), ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை காட்பாடி - திருப்பதி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

எதிர்வழித்தடத்தில், திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி - விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண் 16853), திருப்பதி -காட்பாடி இடையே ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.40 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments