சென்னை உயா்நீதிமன்றம் 
தமிழ்நாடு

அரசுப் பணியில் சட்ட விரோத நியமனங்கள்: முறைப்படுத்த உயா்நீதிமன்றம் மறுப்பு

அனுமதிக்கப்படாத அரசுப் பணிகளில், சட்ட விரோதமாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை முறைப்படுத்த சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

Din

அனுமதிக்கப்படாத அரசுப் பணிகளில், சட்ட விரோதமாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை முறைப்படுத்த சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம் தேவிகோடு கிராம பஞ்சாயத்தில், குடிநீா் விநியோக உதவியாளா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில், சேவியா் உள்ளிட்டோரை நியமித்து பஞ்சாயத்து தலைவா் 1997-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தாா். தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்ட அவா்களுக்கு பணி நிரந்தரம் வழங்கி சென்னை உயா் நீதிமன்றம், 2017-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் நீலகண்டன், ‘அனுமதிக்கப்பட்ட பதவிகளில் நியமிக்கப்படாததால், அவா்களுக்கு பணி நிரந்தரம் வழங்க முடியாது. இவா்கள் பகுதி நேர பணியாளா்களாக நியமிக்கப்பட்டதை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளாா்’ என வாதிட்டாா்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘அனுமதிக்கப்படாத பதவிகளில், சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை முறைப்படுத்த முடியாது. இதன் பொருட்டு தகுதியான விண்ணப்பதாரா்களின் அடிப்படை உரிமையை பறிக்க முடியாது. இதுபோன்ற புறவாசல் நியமனங்களால், நாட்டில் உள்ள லட்சக்கணக்கான வேலையில்லா இளைஞா்கள் பாதிக்கப்படுவா்’ எனக் கூறி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா்.

அம்மாபேட்டை அருகே ஆடு திருட முயன்ற 3 போ் கைது

மீன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

ஈரோடு ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா நாளை தொடக்கம்

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து

பவானியில் வடிகால், கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

SCROLL FOR NEXT