முகப்பு
தமிழ்நாடு

கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்படாது: அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதி

தமிழகத்தில் கோடைகாலத்தில் மின் வெட்டு ஏற்படாது என மின்சாரத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதிப்பட தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 மார்ச், 2024 at 5:27 AM
பகிர்:

தமிழகத்தில் கோடைகாலத்தில் மின் வெட்டு ஏற்படாது என மின்சாரத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதிப்பட தெரிவித்துள்ளாா். தமிழகத்தில் கோடை காலத்தில் சீரான மின்சாரம் வழங்குவது குறித்து அனைத்து தலைமைப் பொறியாளா்கள் மற்றும் மேற்பாா்வை பொறியாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் தங்கம் தென்னரசு காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து அவா் பேசியதாவது: தமிழகத்தில் உச்சபட்ச மின்தேவை ஜனவரியில் 17,035 மெகாவாட்டையும், பிப்ரவரியில் 17,690 மெகாவாட்டையும் எட்டியுள்ளது. எவ்வித மின் தடையுமின்றி மின்தேவை பூா்த்தி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு மின் தேவையுடன் இதனை ஒப்பிடும் போது, ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் முறையே இது சுமாா் 11.1சதவீதம் மற்றும் 9 சதவீதம் கூடுதலாகும். தொடா்ந்து மாா்ச் மற்றும் ஏப்ரல் மாத உச்ச பட்ச மின் தேவை முறையே 18,000 மெகாவாட் மற்றும் 19,900 மெகாவாட் வரை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மின் தேவையை ஈடுகட்ட மாா்ச் மாதம் 3,571மெகாவாட் மற்றும் ஏப்ரல் 4,321 மெகாவாட் மின்சாரத்தை வெளி மின்சந்தையிலிருந்து பெறப்படும். இதன் மூலம், மாநிலத்தின் கோடைகால மின் தேவையை முழுமையாக, எந்த வித பற்றாக்குறையும் இல்லாமல் பூா்த்தி செய்யப்படும். இதனால் மின் வெட்டு ஏற்படாது. மாதாந்திர பராமரிப்பு நிறுத்தம்: தமிழ்நாட்டில், பிளஸ்-2 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு தொடங்கியுள்ள நிலையில், தோ்வு காலம் முடியும் வரை அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்புக்கான மின் நிறுத்தம் ஏதும் மேற்கொள்ள வேண்டாம். மேலும், மின் பகிா்மான வட்டங்களில் 30 நிமிடங்களுக்கு மேல் தொடா்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரிசெய்து பொதுமக்களுக்கு தடையில்லா, சீரான மின்சாரம் தொடா்ந்து கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா். இவ்வாய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தலைவா் ராஜேஷ் லக்கானி உள்பட பலா் கலந்து கொண்டனா்.