DOTCOM
தமிழ்நாடு

‘வெறி பிடித்தவர்கள்..’ கார்த்திக் சுப்புராஜ் வேதனை!

புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வேதனையாக பதிவிட்டுள்ளார்.

DIN

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் மாயமான பள்ளி மாணவி ஆர்த்தி அங்குள்ள கால்வாயில் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

அவரது மரணத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள், உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தொடர்ந்து, சிறுமியைக் கொன்றதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம், பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் பல தரப்புகளிலிருந்தும் குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் தளத்தில், ‘ஜஸ்டிஸ் ஃபார் ஆர்த்தி’ என்கிற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் இச்சம்பவத்தைக் கண்டித்து பதிவிட்டிருந்தார். தற்போது, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ”என்ன ஒரு கொடூரமான மனிதாபமற்ற வெறி பிடித்தவர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்ஐகே வெளியீடு ஒத்திவைப்பு!

பாடகர் ஸுபீன் கர்க் வழக்கு: சிங்கப்பூர் சென்று விசாரணை நடத்தும் திட்டமில்லை! -அஸ்ஸாம் முதல்வர்

பங்குச் சந்தை மூன்றாவது நாளாக உயர்வு: 25,000 புள்ளிகளை மீண்டும் கடந்தத நிஃப்டி!

பிகார் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடும் ஆம் ஆத்மி: வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ஒரே நாளில் இருமுறை உயர்வு! ரூ. 89 ஆயிரத்தைத் தொட்ட தங்கம் விலை!

SCROLL FOR NEXT