குரூப் 1 தேர்வு முடிவு: டிஎன்பிஎஸ்சி வெளியீடு
குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) இன்று(மார்ச். 7)வெளியிட்டுள்ளது.
துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா் உள்ளிட்ட குரூப் 1 பிரிவில் அடங்கியுள்ள 92 காலிப் பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு முன்னதாக நடைபெற்றது.
இத்தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு கடந்தாண்டு குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (மார்ச். 7) வெளியிட்டுள்ளது.
குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் மார்ச் 28 ஆம் தேதி வரை வாய்மொழித் தேர்வு நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
இந்த தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.