நாகை, திருப்பூரில் இந்திய கம்யூ. போட்டி!
நாகை, திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கடந்த வாரம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும், தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், நாகை, திருப்பூர் தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கடந்த தேர்தலில் போட்டியிட்ட நாகை, திருப்பூர் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் களமிறங்குகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.