சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
முகப்பேர், திநகர், கொளத்தூர் உள்ளிட்ட 10 இடங்களில் துணை ராணுவப் படை பாதுகாப்புடன் சோதனை.
சென்னை: சென்னையில் இன்று காலை முதல் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.நகரில் உள்ள நெடுஞ்சாலைகளுக்கு பெயிண்ட் அடிக்கும் நிறுவனத்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் முகப்பேர், கொளத்தூர், திருவான்மியூர், மதுரவாயல், பல்லாவரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.