திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட நிலையில், இம்முறை திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது.
மதிமுக சார்பில் வைகோவின் மகன் துரை வைகோ திருச்சி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டுள்ளனர்.
2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதி காங்கிரஸ் கட்சி வென்ற நிலையில், இம்முறை மதிமுகவுக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.