தமிழ்நாடு

2,500 எண்ணிக்கையில் ரூ.10 நாணயங்கள் வழங்கி சுயேச்சை வேட்புமனு!

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், 2,500 எண்ணிக்கையில் பத்து ரூபாய் நாணயங்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சையால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

நாமக்கல் அருகே மேற்கு பாலபட்டியைச் சேர்ந்தவர் காந்தியவாதி தி.ரமேஷ்(43). இவர் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவராக உள்ளார்.

2006 செல்லப்பம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் முதல் 2023 ஈரோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரையில், பத்து முறை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் நாமக்கல் மற்றும் வாரணாசி தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை தொடங்கிய நிலையில், காந்தி வேடமிட்டு நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் 2,500 எண்ணிக்கையில் பத்து ரூபாய் நாணயங்களுடன், ரூ.25,000 வைப்புத் தொகையுடன் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.உமாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT