ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார்
ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 
தமிழ்நாடு

ஈரோடு அதிமுக வேட்பாளர் யார்?

DIN

ஈரோடு: ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக ஆற்றல் அசோக்குமார்(வயது 54) அறிவிக்கப்பட்டுள்ளார்.

அசோக்குமாரின் தந்தை பெயர் ஆறுமுகம். இவரது சொந்த ஊர் கொடுமுடி, புதுப்பாளையம் கிராமம்.  

இவரின் தாயார் சௌந்தரம், திருச்செங்கோடு அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினர் ஆவார்.

இவரது மனைவி பெயர் கருணாம்பிகா. இவர் மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மகள் ஆவார். அஷ்வின்குமார், நிதின்குமார் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

பி.இ. எம்எஸ், எம்.பி.ஏ. படித்துள்ள ஆற்றல் அசோக்குமார் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். தற்போது தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் சிபிஎஸ்சி பள்ளிகளை நடத்தி வருகின்றார்.

இது தவிர ஆற்றல் அறக்கட்டளை நடத்தி வருகின்றார். பாஜகவில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆற்றல் அசோக்குமார், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தற்போது ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளராக உள்ள நிலையில், ஈரோடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரமே... சித்திரமே...

இருவர் அரைசதம்: லக்னௌ அணிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

சுந்தரி.. கேப்ரெல்லா!

தீராக் காதல்! ஜான்வி கபூர்..

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

SCROLL FOR NEXT