முகப்பு
தமிழ்நாடு

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் யார்? வெளியான தகவல்!

அதிமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக தம்பிதுரை அறிவிக்கப்பட வாய்ப்பு.

Updated On : 3 மார்ச் 2026, 10:14 am IST
நாடாளுமன்றம் (கோப்புப்படம்)
பகிர்:

அதிமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக மீண்டும் தம்பிதுரையே அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களவை உறுப்பினர்கள் மு. தம்பிதுரை, ஜி.கே. வாசன், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி. செல்வராசு ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஏப். 2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், மார்ச் 5-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மார்ச் 9-க்குள் வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். வாக்குப் பதிவு தேவைப்படின் சட்டப்பேரவை குழுக்கள் அறையில் மார்ச் 16-இல் நடைபெறும். மார்ச் 20-இல் தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும்.

தற்போதுள்ள எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக சார்பில் 4 பேர், அதிமுக சார்பில் 2 பேர் மாநிலங்களவை உறுப்பினா்களாக தோ்வு செய்ய வாய்ப்புள்ளது.

2 மாநிலங்களவை சீட்டுகளில் ஒன்றிணை கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு கொடுக்க அதிமுக முடிவு எடுத்துள்ளதாகவும் மீதமுள்ள ஒரு இடத்திற்கான வேட்பாளராக தம்பிதுரையை அறிவிக்க அதிமுக திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிக்கின்றன.

இந்த நிலையில், அதிமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக மீண்டும் தம்பிதுரையே அறிவிக்கப்படவுள்ளதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

Reports suggest that Thambidurai is likely to be announced as the AIADMK's Rajya Sabha candidate again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments