தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் உங்களின் சகோதரனாக பணியாற்றுவேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும் தேனி வேட்பாளருமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேனி பெரியகுளத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் உங்களின் சகோதரனாக பணியாற்றுவேன். இரட்டை இலை சின்னம் தற்போது துரோகிகளின் கைகளில் சிக்கியுள்ளது. விரைவில் அது உரியவர்களிடம் திரும்பும்.
காங்கிரஸ் யார் என்பது மக்களுக்குத் தெரிந்துவிட்டது. மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது. அதனால், நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமராவார் எனக் குறிப்பிட்டார்.