முகப்பு
தமிழ்நாடு

வாக்கு எண்ணும் மையங்களில் ட்ரோன் பறக்கத் தடை

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் ஜூன் 4 வரை ட்ரோன்கள் பறக்க சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

Updated On : 2 மே, 2024 at 7:09 PM
பகிர்:

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் ஜூன் 4 வரை ட்ரோன்கள் பறக்க சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

பெருநகர காவல் ஆணையா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்.19-ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. சென்னையில் 3 தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களை சென்னையில் லயோலா, ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்கு எண்ணும் மையங்களில் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிட ஜூன் 4 வரை சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. இதை மீறும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.