சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு
சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் பலியாகினர், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சுதர்சன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 7 அறைகள் தரைமட்டமாகின. 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 10 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கியவர்களை போராடி மீட்டு வருகிறார்கள். மேலும், காவல் துறையினர் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உராய்வு காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.