தமிழ்நாடு

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 60 பேர்!

திண்டிவனம் அடுத்த பாதிரி அருகே கூச்சி குளத்தூர் கூட்டு சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துள்ளானதில், நல்வாய்ப்பாக 60 பேர் உயிர்தப்பினர்.

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி அருகே கூச்சி குளத்தூர் கூட்டு சாலையில் நிலை தடுமாறிய அரசு பேருந்து சாலை நடுவில் உள்ள தடுப்புக்கட்டையின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இப்பேருந்தில் பயணம் செய்த 60 பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கடலூரில் இருந்து தாம்பரத்திற்கு 60 பயணிகளுடன் அரசுப் பேருந்து திங்கள்கிழமை காலைசென்று கொண்டிருந்தது. பேருந்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பாதிரி அருகே கூச்சிகுளத்தூர் கூட்டு சாலையை கடக்கும் பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய பேருந்து சாலை நடுவில் உள்ள தடுப்பு கட்டையின் மீது ஏறி நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 60 பயணிகளும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பேருந்தில் இருந்த பயணிகள் வெளியேறும் வழி உள்ள பக்கம் சாயாமல் எதிர்புறத்தில் சாய்ந்ததால் விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து பயணிகள் எளிதாக வெளியேற முடிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீஸார் விபத்தில் சிக்கிய பயணிகளை மாற்று பேருந்து மூலம் தாம்பரத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாலையில் கவிழ்ந்த பேருந்தை கிரேன் உதவியால் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"லாட்டரி ஜெயித்துவிட்டீர்கள்!" மோசடியாளர்களின் புதிய SCAM! | Cyber Security | Cyber Shield

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யும் டெய்கின்!

நீதிபதியை தாக்குவதா?வழக்குரைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கார்கே வலியுறுத்தல்!

பிளாக் நூடுல்ஸ்... நிகிதா தத்தா!

என்னவென்று சொல்வதம்மா... ராஷி சிங்!

SCROLL FOR NEXT