ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகம் பகுதிகளில் காட்டு யானைகள், கரடி, செந்நாய்கள் மற்றும் பறவை இனங்கள் அதிக அளவில் உள்ளன.
வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலுக்கு இடையே தற்போது சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் ஆழியார் அணை பகுதிகளில் இருந்த காட்டு யானை கூட்டங்கள் பொள்ளாச்சி வால்பாறை சாலை பகுதிகளில் இரவு நேரங்களில் திறிந்து வருகிறது.
மேலும், வனத்துறையினர் வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகள் இரவில் கவனமுடன் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை சாலை பகுதியில் ஒற்றைக் காட்டு யானை சுற்றுலாப் பயணி வாகனத்தை நோக்கி வரும் விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.