சிங்கப்பூரில் பரவிவரும் புதிய வகை கரோனாவால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என சுகாதாரத்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில்,
சிங்கப்பூரில் ஒமிக்ரான் வகை கரோனா தொற்றின் உருமாறிய கேபி.2 வகை அதிகம் பதிவாகி வருகிறது. சிங்கப்பூரில் பரவி வரும் கரோனா தொற்றால் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கரோனாவால் இந்தியாவில் எந்தவித பயமோ, பதற்றமோ தேவையில்லை. இந்த வகை கரோனா தொற்று இந்தியாவில் ஏற்கனவே பதிவாகியுள்ளது.
இந்த மாறுபாடு இதுவரை லேசான தொற்றுநோயை மட்டுமே தருகிறது. இதுவரை கடுமையான தொற்றும் எதுவும் பதிவாகவில்லை.
கரோனா மற்ற காய்ச்சலைப் போலவே பொதுவான சுவாச நோய்த் தொற்றாக மாறிவிட்டது. வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு அலைகள் கூட வர வாய்ப்புள்ளது ஆனால் பீதியடையத் தேவையில்லை.
தமிழக மக்களிடம் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. எனவே எந்தச் சூழலையும் எதிர்கொள்ள உள்கட்டமைப்பும் வசதிகள் தயாராக உள்ளது. எனவே மக்கள் பீதியடை தேவையில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.