மேட்டூர் அனல் மின் நிலைய இரண்டாவது பிரிவில் மின் உற்பத்தி மீண்டும் துவங்கியது.
காற்றாலை மின் உற்பத்தி காரணமாக மேட்டூர் அனல் மின் நிலையத்தில் முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட மூன்று அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
4வது அலகில் 160 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இன்று காலை நாலாவது அழகிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இரண்டாவது பிரிவில் 600 மெகா வாட் திறன் கொண்ட ஒரு அலகிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது.
இன்று காலை இரண்டாவது பிரிவில் 600 மெகா வாட் திறன் கொண்ட அலகில் மின் உற்பத்தி மீண்டும் துவங்கியது. மற்ற அலகுகள் உற்பத்திக்கு தயாராக இருப்பதாக பொறியாளர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.