பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை
பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதில், 'இரண்டாம் குத்து' படத்தின் விநியோக உரிமையை பெற்ற ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம், ஒப்பந்தப்படி, 4.85 கோடியில் 2 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.
மத்தியஸ்தர் உத்தரவுப்படி பணத்தை வழங்காமல் ராக்போர்ட் நிறுவனம் பிசாசு 2 படத்தை தயாரித்து வெளியிட உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கை சனிக்கிழமை விசாரித்த உயர்நீதிமன்றம் பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.
கோவையில் மலர்ந்த பிரம்மகமலம் பூ!
பிசாசு' திரைப்படம் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கியுள்ளார். இதில் நடிகை ஆண்ட்ரியா நாயகியாக நடித்துள்ளார்.
மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படம் இரண்டு ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கிறது.
தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.