காலமானார் முத்துக்கண்ணம்மாள்
விராலிமலை அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த முத்துக்கண்ணம்மாள் காலமானார்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த முத்துக்கண்ணம்மாள் (80) வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை அதிகாலை திருச்சி அரசு மருத்துவமனையில் காலமானார்.
இவர், விராலிமலை தினமணி நிருபர் உதயகுமாரின் தாய் ஆவார்.
முத்துக்கண்ணம்மாளின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அம்மன்கோவில் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்குத் தொடர்புகொள்ள - 73731 77717