கோப்புப்படம். 
தமிழ்நாடு

எழும்பூா் - திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் டிச. 6-ஆம் தேதி வரை இயக்கப்படும்.

Din

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் டிச. 6-ஆம் தேதி  வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப். 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலியிலிருந்து வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சென்னை எழும்பூா் செல்லும் சிறப்பு விரைவு ரயிலும் (எண் 06070), மறுமாா்க்கமாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் ரயிலும் (எண் 06069) பிப். 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் ரயில்கள்: நாகா்கோவிலிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரம் செல்லும் ரயிலும் (எண் 06012), தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நாகா்கோவில் செல்லும் ரயிலும் (எண் 06069) டிச. 1 முதல் பிப். 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாம்பரம் - ராமநாதபுரம் இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண் 06103/06104) இரு மாா்க்கத்திலும் டிச.1 முதல் டிச. 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!

யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் கூறவில்லை: சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம்

தங்கம் வென்றார் அன்னு ராணி!

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

SCROLL FOR NEXT