தமிழ்நாடு

ஃபென்ஜால் புயல் எதிரொலி: திரையரங்குகள், நகைக்கடைகள் மூடல்!

ஃபென்ஜால் புயல் எதிரொலியால் திரையரங்குகள், நகைக்கடைகள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

DIN

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை(டிச.1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணா பல்கலை.யில் பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திரையரங்குகளும் இன்று (நவ.30) இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து நகைக்கடைகளும் மூடப்படும் என்று நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி அறிவித்துள்ளார். கனமழையால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதாலும், நகைக்கடைகளுக்கு வருவதில் சிக்கல் ஏற்படும் என்பதாலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மழை பாதிப்பு இருக்கக்கூடிய மாவட்டங்களில் உள்ள மொத்தம் 7000 நகைக்கடைகள் இன்று மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரள உள்ளாட்சித் தோ்தல்: 28 அதிமுக வேட்பாளா்கள் அறிவிப்பு

கியா இந்தியா விற்பனை 30% உயா்வு

விடுதிகளுக்கு உணவுப் பாதுகாப்பு உரிமம் கட்டாயம்; விதி மீறினால் நடவடிக்கை: அரசு எச்சரிக்கை

பிகாா்: எஸ்ஐஆா்-இல் அதிக மாற்றங்களைச் சந்தித்த தொகுதிகளில் பாஜக வெற்றி

ஆராய்ச்சிப் படிப்புகள் குறித்து ஆளுநா் விமா்சனம்: அமைச்சா் விளக்கம்

SCROLL FOR NEXT