அக்.8-ல் பாமக சார்பில் இலங்கை தூதரகம் முற்றுகை!
இலங்கை தூதரகம் முன் பாமக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தூதரகம் முன் பாமக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வருகிற அக்டோபர் 8-ஆம் தேதி இலங்கை தூதரகம் முன் முற்றுகை போராட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அக். 8ல் மனிதச் சங்கிலி போராட்டம்: அதிமுக அறிவிப்பு!
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாரம்பரிய கடல் பகுதியில் தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்றும், மீனவர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்தும் போராட்டம் நடத்தப்டும் என்று தெரிவித்துள்ளார்.