நள்ளிரவு வரை சென்னை உள்பட 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
அடுத்த 3 மணி நேரத்துக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு...
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில், கீழ்காணும் 13 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நள்ளிரவு 1.25 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
வேலூர்
திருப்பத்தூர்
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
கடலூர்
விழுப்புரம்
தருமபுரி
கிருஷ்ணகிரி
கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி