இந்தியா உண்மையான மகனை இழந்துவிட்டது! ஏ.ஆர்.ரஹ்மான்
ரத்தன் டாடா மறைவுக்கு ரஹ்மான் இரங்கல் தெரிவித்தது பற்றி...
தமிழ்நாடுஇந்தியா உண்மையான மகனை இழந்துவிட்டது! ஏ.ஆர்.ரஹ்மான்
ரத்தன் டாடா மறைவுக்கு ரஹ்மான் இரங்கல் தெரிவித்தது பற்றி...
தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதுமை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
இந்த நிலையில், ரத்தன் டாடாவின் உயிரிழப்புக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க : ஒரு சகாப்தத்தின் முடிவு! ரத்தன் டாடா கொண்டாடப்படுவது ஏன்?
வாழும் புத்தகம்
“சில மனிதர்கள் தலைமைப் பண்பு, வெற்றி மற்றும் மரபுகளை நமக்கு கற்றுத் தரும் வாழும் புத்தகங்களாக உள்ளனர். மிக அற்புதமான, மக்கள் எளிதில் அணுகக்கூடிய மனிதர்கள், நம்மை ஊக்குவித்து வழிநடத்துகிறார்கள்.
இந்தியா தனது உண்மையான மகனையும் சாம்பியனையும் இழந்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்